Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எவரெஸ்ட் பாலிடெக்னிக் வளாகத் தேர்வு

பிப்ரவரி 08, 2023 08:24

கடையநல்லூர் :- தென்காசி மாவட்டம், கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இறுதி பருவம் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஜே.எம்.ஐ குரூப்  சார்பில் வளாகத்தேர்வு நடந்தது. கல்லூரி தாளாளர் முகைதீன் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.

கல்லூரி ஆலோசகர் தமிழ்வீரன் முன் னிலை வகித்தார். கல்லூரி முதல் வர் இசக்கிமுத்து வரவேற்று பேசினார். இதில் ஜே.எம். ஐ குருப் மனிதவள அதிகாரிகள் மணிகண்டன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வு நடத்தினர். இதில் தேர் வான 65 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


இதில்மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துணை முதல்வர் வெங்கடாசலம், நிர்வாக அலுவ லர்கள் செய்யது அலி, மகேஸ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர். துறைத்தலைவர் கார்த்திகா நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்